நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்! திருமணம் செய்ய காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை வெளியிட்டுள்ளார்.
கோவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி மண்டபங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளில் ஆகக்கூடியது 200 பேர் வரையிலும் வெளியிடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் ஆகக்கூடியது 250 பேர் வரையிலும் கலந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.