பிரதமரை சந்தித்த புதிய தூதரகத் தலைவர்கள்
இராஜதந்திர ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதரகத் தலைவர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பானது, இன்று (10) இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் மற்ற முக்கிய பகுதிகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
இங்கு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உலக சந்தையில் இலங்கை உற்பத்திகளுக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும் அதேவேளையில் வளர்ந்துவரும் சந்தைகளில் வலுவான இருப்பை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட புதிய தூதுத் தலைவர்கள் கத்தாரின் புதிய தூதர் ஆர்.எஸ். கான் அசார்ட், நியூசிலாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் டபிள்யூ.ஜி.எஸ். பிரசன்னா, ரஷ்ய கூட்டமைப்பின் புதிய தூதர் எஸ்.கே. குணசேகர, குவைத் அரசாங்கத்தின் புதிய தூதுவர் எல்.பி.ரத்நாயக்க, அரபு நாடுகளுக்கான புதிய தூதுவர் ஏ.எஸ்.கே. சேனவிரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam