இலங்கையில் கைதான பிரித்தானிய பிரஜை வெளியேறுவதில் புதிய நெருக்கடி
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம் அதை தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என அரசியல் தரப்புகளில் கருத்துக்கள் மேலோங்கியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டம் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்காக நிதி சேகரித்துள்ளதான சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தர்.
இந்நிலையில் அநுர அரசாங்கத்தின் பாதுகாப்பு ரீதியிலான திட்டங்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சில விளக்கங்களை வழங்கியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை தொடர்பில் தகவல் திரட்ட டென்மார்கில் இருந்து 4 ஊடகவியளாளர்கள் இலங்கைக்கு வருகைத்தந்ததாகவும் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri