விலங்குகளிலிருந்து புதிய கோவிட் திரிபு உருவாகும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்
மனிதர்களின் மூலமாக தொற்றுக்குள்ளாகும் விலங்குகளிலிருந்து புதிய கோவிட் திரிபு உருவாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
நாய்கள், பூனைகள், எலிகள் மற்றும் வெள்ளெலிகள் போன்ற விலங்குகளுக்கு, மனிதர்களிடமிருந்து கோவிட் தொற்று பரவும் சந்தர்ப்பங்கள் உள்ளது.
கோவிட் தொற்று உறுதியாகும் மேற்படி விலங்குகளிடமிருந்து புதிய கோவிட் திரிபுகள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
பல விலங்குகள் மனிதர்களிடமிருந்து மற்ற உயிரினங்களுக்கும் வைரஸை பரப்பும் திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனிடமிருந்து கோவிட் தொற்றானது பூனைகளுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri