இனங்காணப்பட்டுள்ள புதிய கோவிட் மாறுபாடு
இந்தியாவில் சிகாடா என அழைக்கப்படும், புதிய கோவிட் வைரஸ் மாறுபாடு ஒன்று பல்வேறு பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் அதன் பண்புகள், பரவும் தன்மை மற்றும் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, இந்த மாறுபாடு ஒரு தனித்துவமான மரபணு மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், டெல்டா அல்லது ஒமிக்ரோன் போன்ற முந்தைய திரிபுகளை விட இது அதிக ஆபத்தானது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை.
ட்ரம்ப் முடிவுகளை முன்கூட்டியே கணித்த மர்ம நபர்கள்: அமெரிக்க சந்தையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முறைகேடு
புதிய வகை சிகாடா
வைரஸை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், சிகாடா வைரஸானது ஓமிக்ரான் என்ற ஒரு துணை மரபிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு, மனித செல்களுக்குள் நுழைய உதவும் வைரஸின் பகுதியான ஸ்பைக் புரதத்தில் முதன்மையாகக் கூடுதல் பிறழ்வுகளைக் குவித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.