எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடி! உலக சந்தையில் எண்ணெய் விலையில் இன்று பதிவாகிய அதிரடி மாற்றம்
மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (30) அதிகரித்துள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.9 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராகப் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பேரல் எண்ணெயின் விலை ஏறக்குறைய 72 டொலர் என்ற அளவில் இருந்த நிலையில், மார்ச் 19 அன்று, அது 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 112 டொலருக்கும் சற்று குறைவாகக் காணப்பட்ட போதிலும், இன்று காலை வர்த்தகம் ஆரம்பமானதும் மீண்டும் 115 டொலரைத் தாண்டியுள்ளது.
போருக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 21 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan