எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடி! உலக சந்தையில் எண்ணெய் விலையில் இன்று பதிவாகிய அதிரடி மாற்றம்
மத்திய கிழக்கு போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (30) அதிகரித்துள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.9 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
அதன்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 2.9% அதிகரித்து, 115.84 டொலராகப் பதிவாகியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு, ஒரு பேரல் எண்ணெயின் விலை ஏறக்குறைய 72 டொலர் என்ற அளவில் இருந்த நிலையில், மார்ச் 19 அன்று, அது 118 டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 112 டொலருக்கும் சற்று குறைவாகக் காணப்பட்ட போதிலும், இன்று காலை வர்த்தகம் ஆரம்பமானதும் மீண்டும் 115 டொலரைத் தாண்டியுள்ளது.
போருக்கு முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam