இலங்கையின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கவுள்ள மத்திய கிழக்கு போர் - ஏற்படவுள்ள பேராபத்துக்கள்
சுமார் ஒரு மாத காலமாக மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரானது, இலங்கைப் பொருளாதாரத்தின் பல துறைகளில் குறிப்பிடத்தக்க பாதகமான பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர் தொடர்ந்தால், இந்தப் பாதகமான பொருளாதாரத் தாக்கங்கள் மேலும் மோசமடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கி ளியிட்ட சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் நிலைமை தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் பாதகமான மறைமுகத் தாக்கங்கள் எதிர்காலத்தில் தீவிரமடையக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
இலங்கையில் ஏற்கனவே சந்தித்து வரும் பொருளாதாரத் தாக்கங்களில், எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விலைகளின் உயர்வு, அதன் விளைவாக விலை மட்டங்களில் ஏற்படும் உயர்வு, பணவீக்கத்தின் அதிகரிப்பு, சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலா வருமானத்தில் ஏற்படும் குறைவு, ஏற்றுமதி வருமானத்தில் ஏற்படும் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மீதான அழுத்தம் ஆகியவை முக்கியமானவையாகும்.

அதற்கமைய, தற்போது 1.6 சதவீதமாக உள்ள பணவீக்கம், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட மும்மடங்காகி சுமார் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மார்ச் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 17.4 சதவீதம் குறைந்துள்ளது.
பொருளாதார தாக்கங்கள்
மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து மார்ச் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளது.

மேலும், விலை உயர்வுகளின் மூலம் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைச் செலவும் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மோதல் நிறைந்த சூழலானது இலங்கையின் வெளித்துறையின், குறிப்பாக எரிசக்தி, சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் ஆகியவற்றின் எதிர்காலக் கண்ணோட்டத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan