புதிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமரின் யோசனை
புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்திற்கான யோசனை ஒன்றை பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்காக பல தரப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை உள்ளடங்கிய அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்துள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவும் என பிரதமர் எதிர்பார்ப்பதாகவும் பிரதமரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், சபாநாயகர் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து செல்லும் வகையில் கொண்டு வரப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் கிடைக்கும் வகையில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
