பிரித்தானியாவில் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய தடை
பிரித்தானிய மகாராணியாரின் பாதுகாப்பு கருதி, அவர் தங்கியிருக்கும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ பறக்க, தடை விதிக்கப்படவுள்ளது.
ஜனவரி 27 முதல், மகாராணியார் வாழும் விண்ட்சர் மாளிகையிலிருந்து 2,500 அடி தொலைவுக்குள் ட்ரோன்களோ, விமானங்களோ நுழையக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கையை மீறி 2,500 அடிக்கு தாழ்வாக பறக்கும் விமானங்களை அகற்ற போர் விமானங்கள் அனுப்பப்படும் என்பதுடன், ட்ரோன்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று, அம்பெய்யும் கருவி ஒன்றுடன் மர்ம நபர் ஒருவர் விண்ட்சர் மாளிகைப் பகுதியில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராணியாரின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri