தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வரவிருக்கும் புதிய எச்சரிக்கை! குழப்பத்தில் கர்தினால்
தேவாலயங்கள் மீதான புதிய தாக்குதல்கள் குறித்த கடற்படையின் எச்சரிக்கை பொய்யானது என்று கூறி, அதற்காக, கடற்படைத்தளபதி மன்னிப்பு கோரிய போதிலும், தேவாலயங்கள் மீது வரவிருக்கும் தாக்குதல்களின் புதிய எச்சரிக்கைகளால், கர்தினால் இன்னும் குழப்பமடைந்துள்ளதாக, கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரங்களுக்கான தகவல் தொடர்பு குழுவின் உறுப்பினர், வணக்கத்துக்குரிய பிதா சிரில் காமினி பெர்னாண்டோ, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தவறான எச்சரிக்கைகள் எப்படி வந்தன? அதன் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்று தேவாலயம் இன்னும் குழப்பத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையின் சில, கடைநிலை உறுப்பினர்கள் தேவாலயங்களுக்குச் சென்று, கத்தோலிக்க பாதிரியாராக மாறுவேடமிட்டு வரும் சில ஆண்களால் சில தேவாலயங்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த வகையில் நாட்டின் பாதுகாப்புடன், எவரும் விளையாட முடியுமா? என்று வணக்கத்துக்குரிய பிதா சிரில் காமினி பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த எச்சரிக்கையின் பின்னர், கடற்படை தளபதி, கர்தினால் மல்கம் ரஞ்சித்துடன் தொடர்பு கொண்டு, பொய்யான இந்த தகவலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். எனினும் இந்த பொய்யான எச்சரிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் மற்றும் அதற்கான காரணத்தை கண்டறிய இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், தேவாலயங்களை மூடி வைக்கலாமா வேண்டாமா என்று தாம் சிந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருச்சபை பாதிரியார் பமுனுகம Fr. சாந்த சாகர ஹெட்டியாராச்சி, செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது, தனது தேவாலயத்திற்கு வந்த கடற்படையை சேர்ந்த, கடைநிலை உறுப்பினர்கள், தாக்குதல் எச்சரிக்கைகள் குறித்து தேவாலயத்தில் உள்ள, ஊழியர்களுக்கு அறிவித்ததாகவும் கூறினார்.
"வெலிகம்பிட்டிய, போபிட்டிய மற்றும் வத்தளை தேவாலயங்களும், இந்த எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வணக்கத்துக்குரிய பிதா பெர்னாண்டோ, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முன் எச்சரிக்கைகளில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் நியூயார்க், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இலங்கை வெளிநாட்டவர்கள் நடத்திய போராட்டங்களுக்கும், இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
