அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி, இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலுக்கு 4-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே அமைதி திரும்புவதற்கான ஒரே வழி என வலியுறுத்தினார்.

ஆபத்தை விளைவிக்கும் நிலைப்பாடு
அதனை ஏற்க மறுத்த நேதன்யாஹு, பாலஸ்தீனம் என ஒன்று இருந்தால் அது, யூதர்களுக்கென தனி நாடாக இஸ்ரேல் இருப்பதற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இஸ்ரேலின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்க கூடிய எந்த நிலைப்பாட்டையும் எங்கள் மீது திணிக்க முயல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை போர்நிறுத்தம் அல்லது தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஐ.நா. சபை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் கோரிக்கைகளையும் இஸ்ரேல் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 23 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri