அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை வெற்றியுடன் நிறைவேறும்: ஜனாதிபதி நம்பிக்கை
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும் என ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒன்றிணைத்தும், கட்சிகளுடன் தனித்தனியாகவும் இரு வழிகளில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியுடன் நிறைவேறும் என்றே நான் நம்புகின்றேன்.
இனப்பிரச்சினை
வடக்கிலும் பிரச்சினை இருக்கின்றது, கிழக்கிலும் பிரச்சினை நிலவுகின்றது, மலையகத்திலும் பிரச்சினை உள்ளது, தெற்கிலும் பிரச்சினை உண்டு. எனவே, தேசிய இனப்பிரச்சினை தொடர இடமளிக்கக்கூடாது.
இந்த பிரச்சினை தொடர்ந்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படாது. எனவே தான் விரைந்து தீர்வைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
