நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில்

Negombo Crime Branch Criminal Investigation Department Prison High Court of Sri Lanka
By Rakesh Jul 15, 2026 05:35 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில், சிறைச்சாலைகள் அவசர நிலைமைகளைக் கையாளும் படையணி உத்தியோகத்தர்கள் 10 பேர் மற்றும் கைதிகள் 21 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பான வழக்கு விசாரணை, நீர்கொழும்பு நீதிவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் நேற்று(14.07.2026) இடம்பெற்றது.

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

நீதிமன்ற உத்தரவு

இதன்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலைகள் அவசர நிலமைகளை கையாளும் படையணி குழுவைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்கள் (சிறைச்சாலை காவலாலர்கள்) மற்றும் 21 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 287 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக நீதிமன்றில் விளக்கமளிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

மோதல் சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளது.

தற்போது இந்தக் கைதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் மாற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனைப் பரிசீலித்த நீதிவான் ஷிலனி பெரேரா, கைதிகளிடம் வாக்குமூலம் பெற தேவையான வசதிகளை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்

அத்துடன், கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் களுஆராய்ச்சி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நீதிமன்றில் மேலதிக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தொடர்ந்து மன்றில் விடயங்களை முன்வைத்த வணிக குற்றப் பிரிவினர், இக்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக கொலைக் குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

தண்டனைச் சட்டக்கோவையின் 102, 113, 146, 186, 300, 315, 316, 317, 344 ஆகிய பிரிவுகளின் கீழும் ஏனைய சட்டங்களின் கீழும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், தோட்டாக்கள் அடங்கிய 60 துப்பாக்கிகள் வழக்குப் பொருளாக குறிப்பிடப்பட்டு, வழக்குப்பொருள் களஞ்சியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதற்கமை வழக்கு விசாரணைக்கு அவசியமான சந்தரப்பங்களின் போது அவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள்

மேலும் விடயங்களை முன்வைத்த அதிகாரிகள், கைதிகள் சிறைச்சாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் டிவிஆர் இயந்திரங்களைச் சேதப்படுத்தியுள்ள போதிலும், அதிலிருந்த இரண்டு கணினி வன்வட்டுக்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

அவற்றை இரசாயனப் பகுப்பாய்வுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால் வழங்கப்பட்ட 3 சுருக்கமான பிரேத பரிசோதனை அறிக்கைகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கொடூரமான தாக்குதல்கள், துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் குறித்து அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்த மோதல் குறித்து நீதிமன்றில் தெரிவிக்கையில்,

கனம் நீதிவான் அவர்களே, கடந்த 5 ஆம் திகதி காலையிலேயே இந்தச் சம்பவத்துக்கான ஆரம்பப் புள்ளி உருவானது.

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்

நீர்கொழும்பு பொலிஸார்

சிறைச்சாலையின் 'ஏ 1' அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் 'கடுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, உடற்பயிற்சி செய்ய வழங்கப்பட்ட நேரம் போதாது எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரம் செய்துள்ளார்.

இதனால் அவர் 'எல்' வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மோதலில் ஈடுபட்டமையால் மீண்டும் 'ஏ 1' அறைக்கு கொண்டு வரப்பட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

அங்கு ஏற்பட்ட கடுமையான மோதலில் ஆரம்பத்தில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் 36 பேர் காயமடைந்தனர். இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் முயன்றபோது, கைதிகள் முழுச் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டையும் தமது கைகளுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸாருக்கும், நீர்கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கும் அவசர தகவல் வழங்கினர். எனினும், சம்பவ இடத்தைச் சோதனையிடச் சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கைதிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

மறுநாள் வரை சிறைச்சாலை கைதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பிலிருந்து 89 சிறைச்சாலை பொலிஸ் உத்தியோகத்தர்களை வரவழைத்துள்ளனர்.

மோதலை கட்டுப்படுத்தல்

அந்தக் காலப்பகுதியில் சிறைச்சாலையில் மொத்தம் 2 ஆயிரத்து 417 கைதிகள் இருந்தனர். 162 தண்டனை பெற்ற கைதிகள், 2 ஆயிரத்து 255 விளக்கமறியல் கைதிகள், இதில் பெண்கள் 161 பேர் அடங்குவர்.

அத்துடன் 161 சிறைச்சாலை ஊழியர்கள் கடமையில் இருந்தனர். மொத்தம் 16 கைதிகள் அறைகள் காணப்படுகின்றன.

கடந்த 6 ஆம் திகதி காலை உணவு வழங்கச் சென்ற போது, 'அதிகாரிகளே உள்ளே வர வேண்டாம், உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள்' எனக் கைதிகள் எச்சரித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கும் 10.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கினர். அதிகாரிகள் ஓடி வந்து இரும்பு வலைக் கதவு வழியாக தப்பித்துக் கொண்டனர்.

ஆனால், மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சிறைச்சாலைகள் அவசர நிலமைகளைக் கையாளும் படையணி குழு உத்தியோகத்தர்களுக்கு வலைக் கதவுப் பக்கமாக ஓடிவந்து தப்புவது குறித்து போதிய பரிச்சயம் இல்லாதமையால், அவர்கள் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கை

அங்கே கைதிகள் அவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, துப்பாக்கிகளைத் எடுத்து சுடத் தொடங்கிய பின்னரே, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பதில் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டனர்.

சிறைச்சாலைக்குள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரி - 56 ரக தோட்டாக்கள் மற்றும் 9 எம்.எம். ரக தோட்டாக்கள் உட்பட 271 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சி.ஐ.டியின் விசாரணை தீவிரம் - முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றில் | Negombo Prison Clash

தற்போது 3 விசாரணைக் குழுக்களைச் சேர்ந்த 40 அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சந்தேகநபர்கள் பெயரிடப்படவுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விவரங்களை மதிப்பிட மதிப்பீட்டுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறும், இராணுவத்தினரால் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் நிகழ்நிலை பதிவுகளைப் பெற்றுக்கொள்ள இராணுவ சமிக்ஞை படையணிக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் கோரிய நிலையில், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவுகளை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான், இந்த வழக்கின் விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 16 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், மரண விசாரணைகள் தொடர்பான வழக்குகளில், இதுவரை சாட்சியம் அழைக்கப்படாத மரணங்கள் குறித்து, சாட்சியங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயார்படுத்த வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!

25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US