நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளருக்கு பிணை
புதிய இணைப்பு
இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படுத்தியிருந்தனர்.
இதன்படி, குறித்த சந்தேகநபர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றையதினம்(06.11.2025) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளமிடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் நேற்றையதினம் சாரதிகள் இருவர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் இதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இன்னிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.