இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் எதிரொலி : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வெற்றிலை கொள்வனவு
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுகிறது.
வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர்.
எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் வெற்றிலைகளைக் கொள்வனவு செய்யாமையினால் உள்நாட்டுச் சந்தைக்கு வரும் வெற்றிலையின் அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்காலத்தில் வெற்றிலையின் விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மறைந்த தந்தையின் கனவை நிறைவேற்ற முழுநேர வேலையுடன் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள பெண் News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு News Lankasri

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri
