தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பு தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவருக்குப் புகலிடம் அளித்து அவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதியும் முன்னாள் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்து பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு பிழையானது என கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (29.04.2026) தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அதன்படி அவரை மீண்டும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்த்து அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னதாக விசாரணை நடத்தப்பட்ட போது சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் நீதவானால் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்த விடுவிப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த நீண்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இசுரு நெத்திகுமார முன்னாள் நீதவான் வழங்கிய அந்த உத்தரவு குறைபாடுடையது என்பதால ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் ஒரு பிரதிவாதியாக வழக்கில் சேர்க்குமாறு தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் நீதியை நிலைநாட்டுவதற்காகத் தலையிடுவதற்கு சட்டமா அதிபருக்கு இருக்கும் பொறுப்பு குறித்தும் நீதவான் இங்கு விரிவான விளக்கமொன்றை சமர்ப்பித்திருந்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வந்த லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் சந்தேக நபருக்குக் கடற்படை விடுதியில் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதி வழங்கியமை மற்றும் அந்த சந்தேக நபர் சட்டத்திலிருந்து தப்பி நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தமை ஆகியவையே முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாகும்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam