அம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் (video)
அம்பாறை - திருக்கோவில் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (30.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாமா, வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், எங்கள் குருதியை உறிஞ்சினாய் எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய், 2 இலட்சம் பிச்சை வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூ செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
