நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் (video)
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
இதன்போது புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கொக்குளாய் பகுதியினை சேர்ந்த மூன்று பேரும் மற்றும் யாஎல, மேகமுவ,வெல்லம்பிட்டிய,களனி, பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாரால் மீட்கப்பபட்ட சான்று பொருட்களையும், சந்தேகநபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற டிப்பர் வாகனத்தில் மணலினால் மறைத்து வைக்கப்பட்ட தொகை முதிரை மரக்குற்றிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து வீதி சோதனையிட்ட போது முதிரை மரக்குற்றிகளை ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஏ 9 பிரதான வீதியில் ஒரே இலக்கத்தகட்டினை கொண்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட மரக்குற்றிகளையும்,சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரெழுவைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டில் சந்தேகநபரின் உறவினர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.


பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
