தேசிய பிரச்சினையை தீர்க்காது ஏமாற்றினால் வடக்கில் இளைஞர்கள் போராடுவார்கள்-ராஜித சேனாரத்ன

13th amendment Sri Lankan Tamils Dr Rajitha Senaratne Northern Province of Sri Lanka
By Steephen Dec 14, 2022 09:49 AM GMT
Report

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைகள் இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகள் போல் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து தரப்பினரின் கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று ஆரம்பமான சர்வக்கட்சி பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

35 ஆண்டுகளாகியும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசுகிறோம்

Rajitha Senaratne-ராஜித சேனாரத்ன

1987 ஆம் ஆண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. தற்போது 2022 ஆம் ஆண்டு நாம் தற்போதும் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.

35 ஆண்டுகள் கடந்தும் அதனை எம்மால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதுதான் நாட்டின் உண்மையான நிலைமை. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் 13 வது திருத்தச் சட்டத்தின் காணி பிரச்சினை வேறு பிரச்சினைகளை பேசி சிக்கலாக்கி கொள்வதை காணக்கூடியதாக இருந்தது.

13வது திருத்தச் சட்டம் முழுமையான நடைமுறைப்படுத்தப்படுமாயின் காணி பிரச்சினை தனியாக ஏற்படாது. 13வது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு மக்களின் இரண்டு பிரதான பிரச்சினைகளுக்கு பதிலளித்தது.

ஒன்று அவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸ். இரண்டாவது அவர்கள் வாழும் காணி தொடர்பான உரிமை. இந்த இரண்டை உறுதிப்படுத்தினால், ஏனைய பிரச்சினைகள் தீர்ந்து விடும். அன்று 13வது திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்கள் தற்போது அதற்கு இணங்கியுள்ளனர்.

எனினும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் போது யாராவது எதிர்க்கலாம். அப்படித்தானே இந்த நாட்டில் வேலைகள் நடக்கின்றன.

நேற்றைய பேச்சுவார்த்தையில் கெவிந்து குமாரதுங்கவை தவிர ஏனைய அனைவரும் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டனர். இது மிகப் பெரிய விடயம்.

13வது திருத்தச் சட்டம் சரியான தீர்வு என்று கூறியதன் காரணமாகவே அன்று விஜய குமாரதுங்கவை சுட்டுக்கொன்றனர். அவரை கொன்றவர்கள் தற்போது மாகாண சபைகளுக்குள் வந்துள்ளனர்.

சம்பந்தன் போன்றவர்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்

Rajitha Senaratne-ராஜித சேனாரத்ன

மாகாண சபைகளின் இயக்கி தங்களின் கைகளில் இருப்பதாக அவர்களின் தலைவர்கள் கூறினர். ஆனால், மாகாண சபைகள் காரணமாக நாடு பிரியும் விசாவை பெற்றே மாகாணங்களுக்கு செல்ல நேரிடும் என்று கூறியே அன்று அவர்கள் விஜய குமாரதுங்கவை கொன்றனர்.

தற்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அவர்கள் என்ன கூறுவார்கள் என்று பார்ப்போம். இம்முறை தேசிய பிரச்சினையை தீர்ப்பதாக கூறி ஏமாற்றினால், கடந்த காலத்தில் நடந்தது போல் போராட்டங்களில் வடக்கை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபடுவார்கள்.

அது ஆயுதம் தாங்கிய போராட்டமாக இருக்காது அமைதியான போராட்டமாக இருக்கும். அதன் மூலம் வடக்கின் அரசியல் முற்றாக தலைகீழாக மாறும். அப்படி நடந்ததால், புதியவர்களுடனேயே எதிர்காலத்தில் பிரச்சினையை பற்றி பேச்சுவார்த்தை நடத்த நேரிடும்.

அதற்கு முன்னர் சம்பந்தன் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியுமான நேரத்தில், கட்டாயம் அதனை செய்ய வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US