தேசிய மட்டத்தில் சாதனை படைத்த அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள்
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் கொடு கொட்டி நடனம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஏனைய எட்டு மாகாணங்களுடன் மோதி இந்த சாதனையை அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
தொடர் பயிற்சிகள்
தொடர்ந்தும் இரண்டாவது முறையாக இந்த சாதனையை குறித்த பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் நடன பாட ஆசிரியரான கஜிதா தனுரனின் நேர்த்தியான நெறியாள்கையில் ஆசிரியர் கல்பனா திருச்செல்வன், அமரகுமார் மற்றும் சத்தியரூபி பிரவிந்தன் ஆகிய ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் மாணவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக மாணவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam