தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

Central Bank of Sri Lanka Vijitha Herath Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples employee provident fund
By Benat Jul 02, 2023 03:00 PM GMT
Report

தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தேசிய கடனை ஒருபோதும் மறுசீரமைக்கப் போவதில்லை என அரசாங்கம் கடந்த காலங்களில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது சர்வதேச பிணைமுறியாளர் குழுவின் நிபந்தனைகளுக்கு அமைய தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அரசாங்கம், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் மக்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது சகல கடன் வழங்குநர்களும் சமவுடமையுடன் மதிக்கப்பட வேண்டும். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்க கூடாது என குறிப்பிடப்பட்டது.

இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான செயற்பாடு வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

இருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்படவில்லை. தனியார் துறையில் தொழில்புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மீது அரசாங்கம் கை வைத்துள்ளது. இவர்களுக்கான வட்டியை தீர்மானிக்கும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்

தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு | National Debt Restructuring Sri Lanka Epf Etf

ஆனால் பிரதான விநியோகஸ்தர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு விலக்களிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது. தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் தனியார் ஆரம்ப விநியோகஸ்தர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 341 கோடி ரூபா வரி செலுத்தவில்லை. இதுபோல் பல நிறுவனங்கள் பல கோடி ரூபா வரி செலுத்தவில்லை. இந்த வரியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. வங்குரோத்துக்கு மத்தியிலும் டீல் கொள்கை செயற்படுத்தப்படுகிறது.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடும் பொய்யை ஏற்றுக்கொள்ள முடியாது. அட்டை பூச்சிக்கு கடிபட்டு,மழையில் நனைந்து வெயிலில் வாடும் தோட்ட தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமது குறைகளை குறிப்பிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த இரு நாட்களாக அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றுக்கு ஏற்படுத்த போகும் மாற்றம் தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் 9 சதவீத வட்டிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுவதை நம்ப முடியாது.

ஏனெனில் இந்த 9 சதவீத வட்டிக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்த கொள்கைளை ஏற்றுக்கொள்வது சந்தேகத்துக்குரியதே.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்ற காரணத்தால் தேசிய கடன் மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் என குறிப்பிட்டுள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US