ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர்

Ranil Wickremesinghe Naseer Ahamed North Western Province
By Uky(ஊகி) Jun 28, 2024 09:14 AM GMT
Uky(ஊகி)

Uky(ஊகி)

in அரசியல்
Report
Courtesy: uky(ஊகி)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Naseer Ahamad) சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் நகர மண்டபத்தில் நேற்று (27.06.2024) இடம்பெற்ற, வடமேல் மாகாணத்தின் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், 

"இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவியது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

தொழில்வாய்ப்புக்கள்  

மின்சாரம் இன்றி மக்கள் மணிக்கணக்கில் அவதிப்பட்டார்கள். ஆனால், இன்று அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், தட்டுப்பாடு இன்றி தாராளமாக கிடைக்கின்றன.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

மேலும், வரிசை யுகங்கள் மறைந்து நாடு ஓரளவுக்கு சுபீட்சமடைந்துள்ளது. மறுபுறத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள சுபீட்ச நிலை காரணமாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் காரணமாக தற்போது தொழில் வரிசைகள் உருவாகியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே இன்று உங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக நாங்கள் 4200 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இன்னும் சிறிது காலத்திற்குள் தொழில் வரிசைகளும் இல்லாது ஒழிக்கப்படும்.

மொட்டு கட்சி எம்.பிகளுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு - செய்திகளின் தொகுப்பு

மொட்டு கட்சி எம்.பிகளுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு - செய்திகளின் தொகுப்பு

ஆசிரியர்களின் பொறுப்பு 

தகுதி வாய்ந்த அனைவருக்கும் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

அதன் இன்னொரு கட்டமாக வடமேல் மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இன்னும் 1500 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க உள்ளோம். அதற்கான வயது எல்லையை 35 - 40 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், நாட்டின் எதிர்காலம் கல்வி கற்ற சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்ந்துள்ளார். அதன் காரணமாக கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றார்.

அவரின் கல்விக் கொள்கையை அடியொட்டி, வடமேல் மாகாணத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.

இத்தாலியில் இலங்கையரின் சடலம் மீட்பு

இத்தாலியில் இலங்கையரின் சடலம் மீட்பு

மாணவர்களின் கல்வி வளர்ச்சி

மேலும், வடமேல் மாகாணத்தை, நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் முன்னணி மாகாணமாக முன்னேற்றுவதே எமது இலக்காகும்.

ஜனாதிபதி ரணில் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்: வடமேல் மாகாண ஆளுநர் | Naseer Ahamad Spoke About Ranil

அதற்கான முக்கிய பொறுப்பு, இன்று பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது. எதிர்கால சந்ததியினரை, நாட்டின் எதிர்கால தலைவர்களை தயார்படுத்தும் பாரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

அதனை உரிய முறையில் மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் செயற்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, அசோக பிரியந்த, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கல்வி அமைச்சு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

மருத்துவ சிகிச்சைக்காக எகிப்துக்கு செல்ல காசா சிறுவர்களுக்கு அனுமதி

மருத்துவ சிகிச்சைக்காக எகிப்துக்கு செல்ல காசா சிறுவர்களுக்கு அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US