மோடிக்காக காத்திருந்த புடின்.. காருக்குள் நடந்த நீண்டநேர உரையாடல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் காருக்குள் 45 நிமிடங்கள் வரை உரையாடிய விடயம் சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் கலந்து கொண்டிருந்த போதே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
ட்ரம்பின் வரி
இருநாட்டு தலைவர்களும் புடினின் காரில் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் உரையாடியுள்ளனர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த சந்திப்புக்கு பிறகு, மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “புடின் உடனான உரையாடல் எப்போதும் பயனுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Had an excellent meeting with President Putin on the sidelines of the SCO Summit in Tianjin. Discussed ways to deepen bilateral cooperation in all sectors, including trade, fertilisers, space, security and culture. We exchanged views on regional and global developments, including… pic.twitter.com/DhTyqOysbf
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
இச்சந்திப்பில் குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி செய்வதை கண்டித்து அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது 50 வீத வரி விதித்தமை தொடர்பில் உரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



