இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுர குமார தொலைபேசி கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (25) பிற்பகல் தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத தாக்குதல்
அதன் போது அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
தொலைபேசி கலந்துரையாடல்
அத்துடன் பஹல்காம் கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைக்கு ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
