நானுஓயா கோர விபத்து! சாரதி தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு (video)
நுவரெலியா - நானுஓயா பகுதியில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாரதி கைது
சந்தேகநபர், இன்று மதியம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 62 வயதுடைய பேருந்தின் சாரதியை நேற்று கைது செய்திருந்தனர்.

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
