தமிழ் இளைஞர்களை இலக்கு வைக்கும் நாமல்! நாட்டின் முக்கிய பொறுப்புக்களுக்கும் பரிந்துரை
வடக்கு - கிழக்கு தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளீர்ப்பதில் பொதுஜன பெரமுன முனைப்புடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்திற்குள் தமிழர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் வடக்கிலிருந்து தமிழ் இளைஞர் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இப்போதும் தமிழ்ச் சமூகத்திலுள்ள இள வயதினருடன் எமது கட்சி நெருங்கி செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதில் தமது கட்சி முனைப்புடன் உள்ளது.
அவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
