நாமலின் பகிரங்க சவாலின் பின்னணியிலுள்ள இரகசியம் : அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சமகாலத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில் கல்வித் தகமைகள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டத்தில் கல்வி தகமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின்(Namal Rajpaksa) சட்ட கல்லூரி பரீட்சை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட முடியாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாமலின் சவால்
நாமல் பரீட்சை எழுதும் போது சட்டக்கல்லூரியில் கடமையாற்றிய பொறுப்பானவர் உயிரிழந்தமையினால் அதனை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே தன்மீதான குறற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என நாமல் பகிரங்கமாக தெரிவித்தார் என அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் வசந்த, நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரி பரீட்சையில் தோற்றிய விதத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் போது தனியான அறையொன்றில் இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் பரீட்சை எழுதியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தான் தனியாக சட்டத் தேர்வு எழுதியது நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகுவேன். ஆனால் நிரூபிக்க முடியாவிட்டால் நீங்கள் வெளியேற வேண்டும் என அமைச்சருக்கு, நாமல் சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
