உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை கண்டுபிடிக்குமாறு கோரும் நாமல்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துமாறு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, இந்த தாக்குதல்கள் தொடர்பாக இங்கிலாந்தின் செனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த அறிக்கை காணவில்லை என கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சிரில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.
உடன் நடவடிக்கை
இந்நிலையில், இது தொடர்பிலேயே நாமல் ராஜபக்ச தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் கண்டுபிடிப்புகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
இது, உண்மையாக இருந்தால், அரசாங்கம் உடனடியாக அதனை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
