இலங்கையில் டிஜிட்டல் பூங்காக்கள் நிர்மாணிக்கப்படும் - நாமல் ராஜபக்ச
தகவல் மற்றும் தொழிநுட்ப துறையில் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் இலங்கையில் 5 டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த 5 டிஜிட்டல் பூங்காக்கள் காலி மற்றும் கண்டி மாவட்டங்களில் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பூங்காக்களில் முதலாவது பூங்கா காலியில் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பூங்கா இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்துர்ம் ஆணைக்குழுவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.