மிகப் பெரும் பொய்யரை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்! நாமல் ராஜபக்ச
இந்நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், மிகப் பெரும் பொய்யரை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட வாக்குறுதி
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்துவதாக வாக்களித்து பதவிக்கு வந்தது. ஆனால் இதுவரை அவர்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

அதே நேரம் இந்த நாட்டின் மிகப் பெரும் பொய்யர் ஒருவரை பொதுமக்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசாங்கத்தை நடத்திச் செல்ல முற்படும் ஜனாதிபதி ஒருவரை மக்கள் கண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri