புலம்பெயர் தமிழர்கள் வழங்கும் பணத்துக்கு ஆடும் அநுர அரசு! நாமல் கிளப்பும் சர்ச்சை
அரசுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து கிடைக்கும் மூலதன அனுகூலங்கள் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் கண்டுக் கொள்ளாமல் இருப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 05.01.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
கரிநாள் போராட்டம்
78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க. ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை.

நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறி கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.
புலம்பெயர் தமிழர்களுடனான உறவு
தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காதது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
அவ்வாறு செய்ய முடியாது. நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறி கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.

உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam