மின் கட்டணம் செலுத்தாத நாமல்! 25 இலட்சத்தை வழங்க தயாராகும் இராஜாங்க அமைச்சர்
நாமல் ராஜபக்ச மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தை தான் செலுத்த தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து இவ்வாறு 25 இலட்சம் ரூபாவை தான் செலுத்த தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காக மின்சார சபைக்கு இதுவரை பெருந்தொகை பணம் செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் நளின் ஹெவகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
25 இலட்சம் செலுத்தத் தயார்
எனினும், இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணம் இதுவரை தமக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 25 இலட்சம் ரூபாவை செலுத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்ச கோரினால் இந்த தொகையை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்த தயாராக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
