நேபாளத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து நாமல் கவலை
நேபாளத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது சமீபத்திய ஆண்டுகளில் தெற்காசியா முழுவதும் வெடித்த போராட்டங்களுடன் இணையாக உள்ளதெனக் கூறியுள்ளார்.
தீவிரவாதத்தின் புதிய வடிவம்
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள், நாடுகளை முடக்கும், இரத்தக்களரியை ஏற்படுத்தும் மற்றும் பொது எதிர்ப்பு என்ற போர்வையில் முக்கிய நிறுவனங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் தீவிரவாத இயக்கங்களாக உருவெடுத்து வருவதாக நாமல் கூறினார்.

பிராந்தியத் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நேரம் இது என்றும், இது தீவிரவாதத்தின் புதிய வடிவம் என்றும் இதன் பின்னணியில் உள்ள "மறை கரங்களை" அடையாளம் காண வேண்டிய நேரம் இது என்றும், வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலைமைகளை கட்டுப்படுத்தப்படாவிட்டால் மேலும் பல நாடுகள் பலியாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
புவிசார் அரசியல்
குடிமக்களின் போராட்டங்கள் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும், ஆனால் நாம் பார்ப்பது அனைத்துத் தலைவர்களாலும் கையாளப்பட வேண்டிய மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் கூடிய ஒரு புதிய வடிவ தீவிரவாதமாகும் என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.

புவிசார் அரசியல் நிலைமை பெருகிய முறையில் உணர்திறன் மிக்கதாக மாறும்போது இந்த வளர்ந்து வரும் அச்சுறுத்தலை அவிழ்த்து நிவர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri