அரசியலில் தொடரும் நெருக்கடி: ராஜபக்சர்களுக்கு விரட்டப்பட்ட தோசம்
பொதுஜன பெரமுன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தோசம் நீக்கும் நோக்கில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் பெலியஅத்த தொகுதி சபைக் கூட்டத்தின் இறுதியில் இந்த சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் தொகுதி சபைக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் பெலியத்த புவக்தன்டாவ பிரதேசத்தில் நடைபெற்றது.
சாந்தி கர்மம்
இதன்போது, அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, டி.வி.சானக்க, தேனுக விதானகம திஸ்ஸ குட்டியாராச்சி டபிள்யூ.டி. வீரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சபைக் கூட்டத்தின் இறுதியில் சலுபாலி எனப்படும் சாந்தி கர்மம் செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்சவின் தோசம் நீக்கவே இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
