பேரணிக்கு பின்னர் சபையில் சீறிய நாமல்..!
மூன்று நாட்களில் கெப் கொண்டுவர முடியுமெனில், ஏன் நாட்டுக்கு மருந்துகளை கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய (22.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரச அதிகாரிகளுக்கு வாகன பெர்மிட்களை கொடுப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெர்மிட்களை வழங்க மாட்டோம் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
கெப் இறக்குமதி
ஆனால், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் வாகனம் கொண்டுவரப்பட உள்ளது. அரசாங்கம் 1,700 கெப் வாகனங்களை இறக்குமதி செய்கின்றது.

இதன் நோக்கம் என்ன என எங்களுக்கு புரியவில்லை. அந்த காலத்தில் போல, வாழை இலைகளை கொண்டு வருவதா இதன் நோக்கம் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் வழங்கலாம், ஆனால் வைத்தியர்கள், கடமைக்கு செல்வதற்கு வாகனம் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan