விமானப் பணிப்பெண்ணுக்கு 6 இலட்சம் வழங்கிய நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமானப் பணிப் பெண் ஒருவரை அலரி மாளிகையின் ஒரு அறைக்கு அழைத்து ஆறு இலட்சம் சம்பளம் வழங்கினார் என்று பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
மேலும் தெரிவித்த அவர்,
“மக்களின் பணத்தை இவர்கள் இவ்வாறே மோசடி செய்தனர்.இப்போ வெட்கமில்லாமல் பேசுகின்றார்.
அன்று இவர்களின் தலைவர் மகிந்த ராஜபக்ச 2009 ஆம் ஆண்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி என்னை அரசியல் பழிவாங்கலில் தொழிலை இல்லாமல் செய்தார்.
ஆனால் வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்தின திவுல்கனே என்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தார்.
நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட தொழிற்சங்க சட்டத்தின் படி நான் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டேன்.உங்களை போல் தண்டச் சம்பளம் வாங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
You may like this..




