நல்லூரில் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான்! களைகட்டிய சூர்யோற்சவம் (Live)
இலங்கையின் வடக்கில் குடி கொண்டு வீற்றிருக்கும் அறுபடை வீடுடைய வள்ளி மணாளன் நல்லூர் முருகனின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நல்லூர் முருகப்பெருமானின் மகோற்சவ தரிசனம் காண உள்நாட்டில் மட்டும் அல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஆயிரமாயிரம் பக்தர்கள் வருடாவருடம் வருகை தருவது வழக்கமாகும்.
அந்த வகையில் 19ஆம் திருவிழாவான இன்றைய தினம் சூர்யோற்சவம் இடம்பெற்றுள்ளது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.
மேலதிக தகவல் மற்றும் படங்கள் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |