அழகிய மஞ்சத்தில் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலித்த நல்லூர் கந்தன் (Live)
யாழ்ப்பாணம்-நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று (30.08.2023) காலை ஆரம்பமானது.
இந்நிலையில் மஞ்சத்திருவிழாவின் மாலை நேர பூஜைகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக்குமார சுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.