நயினாதீவில் வெசாக் கொண்டாட ஏற்பாடு செய்தது உலக சாதனை! - நாக விகாரையின் விகாராதிபதி தெரிவிப்பு
இந்த வெசாக் பண்டிகையானது எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்பு யாழ்ப்பாணத்தில் நயினாதீவு நாகவிகாரையில் கொண்டாடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இது ஒரு உலக சாதனையாகும் என நயினாதீவு நாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
48 ஆண்டுகளாக நான் நயினாதீவு தமிழ் மக்களோடு தான் இருக்கிறேன். அந்த வகையில் இங்கு வாழும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பிரதமரோடு பேசி இந்த வெசாக் பண்டிகையினை இங்கு கொண்டாட அனுமதி பெற்றுள்ளேன்.
அதில் முக்கியமாக அராலி சந்தியிலிருந்து குறிகட்டுவான் நோக்கி வரும் பாதை,
பாலங்கள், வைத்தியசாலை மற்றும் வீதிகள் என்பவற்றைத் திருத்தம் செய்வதோடு ஏனைய
அபிவிருத்திகளையும் மேற்கொள்வதற்கே வெசாக் பண்டிகையினை இங்கு
கொண்டாடுகின்றோம் என தெரிவித்துள்ளார்.