இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....!

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Crime Branch Criminal Investigation Department Money Death
By Vethu May 12, 2026 11:56 AM GMT
Report

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகின்றன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரின் வீட்டில் கபில உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்தாலும், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் பாரிய முறைகேடுகள் நடந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கபில கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..

விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..

மகிந்தவுக்கு வந்த அழைப்பு 

கபிலவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது ராஜபக்ச தரப்புக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குற்றப் புலனாய்வு நிதி மோசடி பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது.

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....! | Mystery Surrounding Kapila S Death

இவ்வாறானதொரு நிலையில் கபில மர்மமான நிலையில் உயிரிழந்தமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது மோசடியில் ஈடுபட்ட எவரையும் பாரபட்சம் இன்றி தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் மகிந்த கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பான வாதங்கள் தீவரம் பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பூட்டிய அறைக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் தரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கபிலவின் கழுத்தில் காணப்பட்ட பட்டி, உயிரிழப்பதற்கு முன்னர் ஊழியர் ஒருவரினால் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாரிய நிதி மோசடி

எயார்லைன்ஸிற்குள் நடந்த பாரிய நிதி மோசடியின் பிரதான சாட்சியாளரான கபிலவின் சாட்சியம் ராஜபக்சர்களுக்கு பெரும் ஆபத்தாக மாறலாம் என்ற அச்சம் காரணமாக மர்ம நபர்களால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையை அதிர வைக்கும் மர்ம மரணங்கள்! சாட்சியங்களை அழிக்கும் மர்மம்! அடுத்த இலக்கு யார்.....! | Mystery Surrounding Kapila S Death

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மகிந்தவின் செயற்பாடும் அமைந்துள்ளமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், கபில சந்திரசேனவின் மரணத்தின் பின்னர், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மகிந்த தெரிவித்துள்ளமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலங்களில் தமக்கு எதிராக செயற்படும் நபர்களை கொலை செய்து, கடலில் வீசுவதாகவும், கோட்டபாய வீட்டில் வளர்க்கப்பட்ட முதலைக்கு இரையாக போடப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.

தற்போது எதிர்க்கட்சியாக செயற்படும் ராஜபக்ச குடும்பத்தினர், பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் கபிலவின் மரணம் பெரும் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான உண்மை நிலைப்பாட்டை சமகால அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இலங்கையிலும் சடுதியாக அதிகரிக்கவுள்ள விலை

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 12 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US