விடுதலைப் புலிகளின் தலைவருக்கே அஞ்சாத மகிந்த! விசாரணை ஆணைக்குழுவில்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே அஞ்சாத மகிந்த ராஜபக்சவா சாதாரண விசாரணை ஆணைக்குழுவுக்கு அஞ்சப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது அழைத்துள்ளது.
கபிலவின் வாக்குமூலம்
அவர் மிகவும் நிதானமாகவும், துணிச்சலாகவும் இந்த விசாரணைகளை எதிர்கொள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தைப் பொறுத்தவரை, எமது பிரதான போராட்டம் தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமே உள்ளது. அரசாங்கம் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராகவே நாம் செயற்படுகிறோம்.
மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறி வாக்குக் கேட்டு ஆட்சிக்கு வந்த அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளது.
இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் ஏற்கனவே இந்த அரசாங்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள். இதன் அரசியல் ரீதியான பாரிய வீழ்ச்சியை அரசாங்கம் நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும்.

தற்போதைய மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமும் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்களுமே காரணமாகும். இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
நாம் எமது இலக்கை நோக்கித் துல்லியமாக நகர்கிறோம். நாம் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.
இத்தகைய தேவையற்ற விசாரணை அழைப்புகள் மூலம் எம்மை அச்சுறுத்தவோ அல்லது எமது அரசியல் பயணத்தைத் தடுக்கவோ முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan