திடீரென வற்றிய நீர்நிலைகள்: மர்ம சத்தங்களால் அச்சத்தில் மக்கள் - செய்திகளின் தொகுப்பு
கொத்மலை - ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில் கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பழங்காலத்திலிருந்தே இந்தப் பகுதியில் அன்றாடம் உபயோகித்து வந்த நீர் நிலைகள் திடீரென வறண்டு போனது ஆச்சரியமாக உள்ளதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் 4 நாட்கள் உறங்காமல் ஒரே இடத்தில் இரவு பகலாக கலந்துரையாடி தீர்வு காணவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



