இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம வாயுவால் நிலைகுலைந்த மக்கள்
இங்கிலாந்தின் பர்மிங்காமிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வாடிக்கையாளர்கள் சிலர் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Longbridge என்ற இடத்தில் அமைந்துள்ள Sainsbury's பல்பொருள் அங்காடியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி, காலை 10.00 மணியளவில், அந்த பல்பொருள் அங்காடியில், அபாயத்தை ஏற்படுத்தும் பொருள் ஒன்று தொடர்பில் ஓரு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
ஏழு பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலைகுலைந்து சரிய, உடனடியாக அவசர உதவிக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம வாயுவால் நிலைகுலைந்த மக்கள்: சற்று முன் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் 150 வாடிக்கையாளர்கள் பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ஏழு பேருக்கும் அங்கேயே வைத்து உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடாத நிலையில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள், ஏதோ ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம வாயுவால் நிலைகுலைந்த மக்கள்: சற்று முன் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் பொலிசார், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பல்பொருள் அங்காடியைச் சுற்றிலும் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம வாயுவால் நிலைகுலைந்த மக்கள்: சற்று முன் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்.