இலங்கையில் பூமிக்கு கீழ் ஏற்பட்ட மர்ம ஒலி: சிரேஷ்ட பேராசிரியர் வெளியிட்ட தகவல்
கொத்மலை வெவத்தென்ன கிராமத்தில் அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சமடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சமடைய எந்த காரணமும் இல்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூத்த பேராசிரியர் கூறுகையில், பூமியில் உள்ள ஓட்டை வழியாக நீர் மற்றும் காற்றின் எதிர்வினையால் ஒலி ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மர்ம ஒலி
சுமார் ஒரு வாரமாக, இந்த மர்ம ஒலியைக் கேட்டு பயந்த கிராம மக்கள், இரவைக் கழிக்க அருகிலுள்ள மற்ற கிராமங்களுக்குச் சென்றனர்.
கொத்மலை குளத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தின் நிலப்பகுதிக்கு அடியில் பெரிய தண்ணீர் மோட்டார் இயங்குவது போன்ற சத்தம் இருப்பதாக கொத்மலை கிராம மக்கள் தெரிவித்தனர்.
சத்தம் கேட்டு அச்சமடைந்த கிராம மக்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், சத்தத்தை உணர்ந்த பூண்டுலோயா பொலிஸ் நிலைய அதிகாரிகள், புவியியல் அறிவுள்ளவர்கள் அந்த இடத்தை அவதானிக்கும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிராம மக்களிடம் தெரிவித்தனர்.





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
