புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட மர்ம பொதி: தீவிர விசாரணையில் பொலிஸார்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் மர்மமான பொதி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(18.01.2024) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான பொதியொன்று காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மர்ம பொதி
இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத் தலைமையிலான
பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த பொதியினை மீட்டுள்ளனர்.
இதன்போது கண்டெடுக்கப்பட்ட பொதியினுள் 50 ரக துப்பாக்கி ரவைகள் 37 மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பொதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்தில் மர்ம பொதியினை விட்டுச்சென்ற நபர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கபெறாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
