முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்
முல்லைத்தீவு(Mullaitivu) கடற்கரைப்பகுதியில் நேற்றையதினம்(22) மிதந்து வந்த மர்மப்பொருளால் கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் நேற்றையதினம் மர்மபொதி ஒன்று மிதந்து வந்துள்ளது.
மர்ம பொருள்
இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடற்றொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம பொதியினை எடுத்து சோதனை நடத்தியதில் அதில் 14.7 கிலோகிராம் கோடெக்ஸ் எனும் வெடிபொருள் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இடத்தில் இருந்து மீட்டு முல்லைத்தீவு பொலிஸார் வெடிபொருளை கொண்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
