யாழ். கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூடாரம்
யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றியுள்ளனர்.
குறித்த கூடாரமானது நேற்று(22.02.2024) கரையொதுங்கியுள்ளது.
கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
அப்புறப்படுத்தும் பணி
கரையில் இருந்து கூடாரத்தை அப்புறப்படுத்தும் கடற்றொழிலாளர்களின் முயற்சி தோல்வியுற்றதால், ஜேசிபி உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று(23.02.2024) அகற்றியுள்ளனர்.
கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு கடற்றொழிலாளர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |