கஞ்சா தொடர்பிலான தமது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் டயனா கமகே
திரிபுபடுத்தப்பட்டுள்ள கருத்து
கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் துண்டை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.
கஞ்சா ஏற்றுமதி
கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் பிணைந்த ஒன்று. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே நாம் கஞ்சாவை பயிரிட வேண்டும்.
கஞ்சா என்பது ஒரு மருந்து. அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கிணற்றுத் தவளைகளைப் போன்றவர்களே எமக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam