எனது தந்தை தேசத்தின் தந்தை! - ரோஹித ராஜபக்ச புகழாரம்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச, தனது தந்தை தேசத்தின் தந்தை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது தந்தை ஒரு தேசத்தின் தந்தையானபோது, மூத்த சகோதரருக்கு அப்பால் நீங்கள் ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டீர்கள்.
நீங்கள் யோஷிதவிற்கும், எனக்கும் இரண்டாவது தந்தையாகிவிட்டீர்கள். நீங்கள் எங்கள் பாதுகாவலர் மற்றும் வழிகாட்டி. நீங்கள் இப்போது என் மகனுக்கு பெரிய தந்தை என்று ரோஹித ராஜபக்ச தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Dearest Namal Aiya,
— Rohitha Rajapaksa (@Rohitha_Chichi) April 10, 2021
When our father became the father of a nation, you took upon a role beyond our eldest brother. You became a second father to @YoshithaR and me; our protector and mentor. You are now 'Loku Thaththi' to my son.
Happy Birthday @RajapaksaNamal
Love,
Chichi pic.twitter.com/5wSZjGReNV