மூதூர் பிரதேச செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நேற்று (08) பிரதேச கணக்காய்வு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஃறூப் அவர்களின் சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பதவி உயர்வு
இந்நிகழ்வில் மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் எஸ்.எச்.எம். மர்சூக் , உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், தலைமை சமுர்த்தி முகாமையாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளராக சேவை புரிந்த இவர் பதவி உயர்வு பெற்று அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளராக செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |